கோவையில் கஞ்சா விற்றதாக ஒரே நாளில் 5 பேர் கைது..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார்.நேற்று கோவை புறநகர் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடத்தினார்கள். அப்போது சூலூர் அரசூர் பிரிவு அருகே கஞ்சா விற்றதாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஷாம்பு (வயது 38) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதே போல துடியலூர் அருகே கவுண்டம்பாளையம்,இடையர்பாளையம் ரோட்டில் கே.கே .புதூர் பிரிவில் கஞ்சா விற்றதாக விஜயகுமார் (வயது22) கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

தொண்டாமுத்தூர் தாளியூர் சிறுவாணி, வாட்டர் டேங்க் அருகே கஞ்சா விற்பனை செய்த தொண்டாமுத்தூர் யோகேஸ்வரன் ( வயது 20) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 300 கிராம் கைப்பற்றப்பட்டது.

காரமடை கணுவாய் பாளையம் அருகே கஞ்சா விற்ற அரவங்காடு ஸ்டீவ் (வயது 24 )கைது செய்யப்பட்டார் .அரை கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள ஒரு பார் அருகே கஞ்சா விற்றதாக மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சேர்ந்த முகமது அபுதாகிர் (வயது 28) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.