கோவையில் ஓடும் பஸ்சில் நர்சிடம் தாலி செயின் பறிப்பு..!

கோவையில் உள்ள குறிச்சி சில்வர் ஜூப்ளி விதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பாரதி ( வயது 27 )இவர் சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். குறிச்சியில் இருந்து உக்கடத்திற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார் .அப்போது யாரோ அவரது கழுத்தில் கடந்து 3 பவுன்தாலி செயினை திருடி சென்று விட்டனர் .இது குறித்து பாரதி உக்கடம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.