ரஷ்யாவின் மிரட்டல்களுக்கு உக்ரைன் அரசு பணியாது என அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சிறிய நகரங்களை தன்வசப்படுத்திய ரஷ்ய படைகள் தற்போது தலைநகர் கீவ்-வை சுற்றிவளைத்து நிற்கிறது. நகரில் ஒரு வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கீவ் ...

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைனில் உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் குற்றம்சாட்டி இருக்கிறார். வாஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன் உக்ரைனை எளிதில் கைப்பற்றி விடலாம் என்ற ரஷ்யாவின் திட்டம் பலனளிக்கவில்லை என்றார். இதனால் உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்களை கையில் ...

பிஜீங்:சீனாவில் விபத்து நிகழ்ந்த விமானத்தில் இருந்த 132 பேரும் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சீனா ஈஸ்டர்ன், எச்என்ஏ. என அரசுக்கு சொந்தமான 4 விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம் 123 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 132 ...

உத்தர பிரதேசம் வாரணாசியை சேர்ந்த சுவாமி சிவானந்தாவுக்கு 126 வயதாகிறது. யோகா குருவான அவர் இந்த வயதிலும் நாள்தோறும் யோகாசனம் செய்து வருகிறார்.அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. விருதை பெறுவதற்காக, சுவாமி சிவானந்தா யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நடந்து வந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை பார்த்ததும், அவருக்கு முன்பாக தரையில் ...

சென்னை: சென்னை ஓட்டேரியில் உள்ள விநாயகர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறியது: தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறாத, குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோயில்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டு ...

புதுடெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்வினையாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. அதையடுத்து, பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து கச்சா ...

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த உயர்நிலை தொழில் துறை குழுவினர் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே அனைத்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த யுஏஇ குழுவினர் நேற்று முன்தினம் நகர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ...

கொழும்பு ; இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி இரட்டிப்பாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு கோப்பை தேநீரின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. இலங்கை ரூபாயின் மதிப்பை அரசு சமீபத்தில் வெகுவாக குறைத்தது. இதனால் ஏற்றுமதி, சுற்றுலா துறை பாதித்தது. இதன் காரணமாக அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்கியது. இதனால், அங்கு கடும் ...

சென்னை: பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்ற பாரதியாரின் கனவு இன்றைய காலகட்டத்தில் நனவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். செய்யும் பணியில் ஆண் பெண் என்ற பேதம் பார்க்காமல், எல்லா வேலைகளையும் பெண்கள் செய்யும் காலம் இது. அதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டமன்ற வரலாற்றில் ...

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார். கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் ...