குளிர்சாதன பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகளுக்கு கரோனா பெருந்தொற்று அச்சமா காரணமாக படுக்கை விரிப்புகள் வழங்க தடை இருந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வே அதனை தளர்த்தி வழங்குவதற்கு தீவிரம் காட்டி வருகிறது. கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட பிறகும் குளிர்சாதன பெட்டிகளில் படுக்கை விரிப்புகள், தலையணை, கம்பளி போர்வை போன்றவை வழங்கப்படவில்லை ...

ஆப்கானிஸ்தான் கலாச்சாரத்தின்படி ஒரு திட்டம் வரையப்படும் வரை பெண்களுக்கான பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிப்பு.. ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, கொரோனாவால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் ...

மத்திய அரசு இதுவரை இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேஷன்களை முடக்கியுள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் தகவல். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT) கீழ்,அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான,நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்ய,மத்திய அரசு இதுவரை 320 மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய ...

வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் இயற்கை வளங்களில் எந்த காரணத்திற்காகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்கக் கோரிய மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி “நம் பூமி மீது ஏற்படுத்தும் எந்த பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. ...

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வழக்கறிங்கர்களாக இருந்த என்.மாலா, எஸ்.செளந்தர் ஆகியோரை நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், ...

கோவை போளுவம்பட்டி வனப்பகுதியில் உடல்நல குறைவால் அவதிப்படும் 8 வயது பெண் யானைக்கு, கால்நடை மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டம் போளுவம்பட்டி வனச்சரகம் முள்ளாங்காடு தாணிக்கண்டி வனப்பகுதியில், நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, 8 வயது பெண் குட்டியானை உடல்நல குறைவினால் அவதிப்பட்டு வருவதை கண்டறிந்தனர்.இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ...

அந்தமான் நிகோபார் தீவில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக நேற்று சோதனை செய்துள்ளது.ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் பிற பாதுகாப்பு அதிகாரிகள் ஏவுகணை ...

புதுச்சேரி: 6 டன் எடையுள்ள பாறையை குடைந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020-ல் காலமானார். காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு எஸ்.பி.பிக்கு நினைவு இல்லத்தை, அவரது மகன் எஸ்.பி.பி.சரண் உருவாக்கி வருகிறார் ...

சென்னை : போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை பார்த்து பாராட்டி ஆட்சியரின் 6 வயது மகள் பரிசளித்த சம்பவம் சக காவலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் அடுத்த மணப்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் தலைமை காவலர் சாலமன் சதீஷ்(44). இப்பகுதியில் அதிகளவில் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் ...

1914ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட நிலக்கரி எஞ்சின் 2017ம் ஆண்டு வரை நீலகிரி மலை ரயில் இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது. நூறாண்டுகளைக் கடந்தும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த எஞ்சினுக்கு ஓய்வு வழங்கப்பட அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அதன் திறன் குறித்தும், பழுதற்று செயல்படும் தன்மை குறித்தும் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் இந்த எக்ஸ் க்ளாஸ் ...