கோவை ஜி என் மில்ஸ், சுப்ரமணியன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜி கார்த்திக், இவர் தனது மனைவியின் பெயரில் வாங்கிய இரண்டு வீட்டு மனைகளின் கட்டட வரைபட அனுமதிக்காக, பிளிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார், அதற்கான அரசு கட்டணங்களை செலுத்திய நிலையில், கடந்த 30ஆம் தேதி, வரைபட அனுமதிக்காக எழுச்சி பஞ்சாயத்தின் தலைவர் சாவித்திரியை சந்தித்த நிலையில், ...

தமிழகத்தில் மருந்துத் தட்டுப்பாடு என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி இணைந்து போதை விழிப்புணர்வுக்கான மினி மாரத்தான் ஓட்டம் ராஜீவ்காந்தி ...

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாசிக்கில் உள்ள அவுரங்காபாத் சாலையில் டீசல் ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி மீது மோதியதில் ...

நெம்மேலி பகுதியில் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதல்வர் திறந்து வைப்பார் என மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் கே என் நேரு பேசினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சென்னை தங்க ...

திருவொற்றியூர்: சென்னை துறைமுகத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 37 வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு கன்டெய்னர்களில் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர்களில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில், அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து சட்ட விரோதமாக பொருட்களை ...

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். மேலும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக். 17-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. ...

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு ...

திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலாவுக்கு புறப்பட்ட பள்ளி மாணவர்கள் விபத்தில் பலியான சம்பவத்துக்கு காரணமான பஸ் டிரைவர், இருக்கையில் இருந்து எழுந்து நின்று நடனமாடிய வீடியோ வைரலாகி இருக்கிறது. கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஊட்டிக்கு இருதினங்களுக்கு முன் சுற்றுலா புறப்பட்டனர். அவர்கள் சென்ற பஸ், பாலக்காடு ...

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் முழ்கி ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இதில் அதிகமாக ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழந்து வந்தனர். இதனால் பல்வேறு குற்றங்களும், தற்கொலை சம்பவங்களும் நிகழ்ந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 10ம் தேதி ஓய்வு பெற்ற ...

கோவை: தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .அதன் விவரம் வருமாறு:- சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக தேன்மொழி நியமனம்.ஆயுதப்படை பிரிவு ஐ.ஜி .கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம்.செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பிரதீப் நியமனம். சென்னை பரங்கிமலை காவல்துறை ...