சென்னை: கடந்த 5 மாதங்களில் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான பொருட்களை ரயில்வே போலீஸார் மீட்டனர். அவற்றை டிஜிபி சைலேந்திரபாபு உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைத்தார். தமிழகம் முழுவதும் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட நகைகள், செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சென்னை பெரம்பூர் ரயில்வே திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. திருச்சி, சென்னை ரயில்வே ...

கேரளத்தில் தமிழ் பெண் உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பெண் 49 வயதான ரோஸ்லி மற்றும் தமிழ்நாட்டின் தர்மபுரியை சேர்ந்த 52 வயதான பத்மா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஹீலர் பகவல் ...

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட மொத்தம் 12 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த V . கோவிந்தராஜ் Ex MLA, (கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர்) KE ...

கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள கொண்டசாமி நாயுடு வீதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது 18 வயது மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7 – ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவரது மகள் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது . இது ...

தமிழக – கேரள எல்லையான மாங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், அதற்காக வேறு பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கிச் செல்ல அன்னூர் பகுதிக்கு சிலர் வர உள்ளதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அன்னூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ...

கோவை ரத்தினபுரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது ரத்தினபுரி சம்பத் வீதி பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமான வகைகள் நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்த விற்பதற்காக நின்று கொண்டு இருந்தது ...

பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நடத்தப்படுகிறது. தொழில் வாய்ப்புகள், தொழில் நேரடி செயல் முறை பயிற்சிகளை ஊக்குவிக்க திறன் இந்தியா திட்டம் எனப்படும் ஸ்கில் இந்தியா மிஷன் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் ...

சென்னை: ஐபோன் தயாரிப்பில் கோலோச்சி வரும் தைவானின் பெகாட்ரான் நிறுவனம், தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது. ரூ.1,100 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலையின் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க உள்ளதுதான் ஹைலைட். செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் அமைந்துள்ள பெகாட்ரான் நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ...

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் எலந்தூர் கிராமத்தில் அண்மையில் 2 பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜு கூறியதாவது: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பகவால் சிங். இவரிடம் ...

தமிழக காவல்துறையின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி! தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் மூன்று நாட்களில் கொலை முயற்சி மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த 3,095 ரவுடிகளை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் பல்வேறு கைது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக ...