என்ன கொடுமை… நரபலி கொடுத்த மனித இறைச்சிகளை விற்றால் அதிக பணம்… ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட திக்.. திக்.. சம்பவம்..!!

நரபலி கொடுத்த உடல் பாகங்களை விற்பனை செய்தால் நல்ல பணம் கிடைக்கும் என நினைத்து 2 நாட்களாக ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முகமது ஷாஃபி, பத்தனம்திட்டா இலந்தூரைச் சேர்ந்த பாரம்பரிய வைத்தியர் பகவல்சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். இரட்டை நரபலி நடந்த பகவல் சிங்கின் வீட்டிற்கு மூவரையும் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பகவல் சிங் வீட்டிலும், ஃப்ரிட்ஜிலும் ரத்தக்கறைகள் இருந்தது கண்டறியப்பட்டன. மனித இறைச்சி சமைத்த பாத்திரங்களும், உடலை வெட்ட பயன்படுத்திய 3 கத்திகள், ஒரு வெட்டுகத்தி, மரக்கட்டை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.