கோவையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 3 காவல் நிலையங்களுக்கான பகுதிகள் அறிவிப்பு..!

கோவை கவுண்டம்பாளையம், சுந்தராபுரம் கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் புதிதாக 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது. அந்த 3 போலீஸ் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டர்,சப் இன்ஸ்பெக்டர்கள்,, தலைமை காவலர்கள் போலீசார் என்று தலா 31 பேர் வீதம் மொத்தம் 93 பேர் நியமிக்கப்படுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய போலீஸ் நிலையங்களுக்கான பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கரும்புக்கடை போலீஸ் நிலையத்திற்கு 62 வது வார்டு ஒரு பகுதி, 82 வது வார்டு, 87வது வார்டு 95வது வார்டு பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சுந்தராபுரம் போலீஸ் நிலையத்துக்கு வார்டுகள் 94, 96 ,97,.98 ,100-வது வார்டு பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு 16, 18 ,33 , 34, 35 வது வார்டு பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன..