தலையில் கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை – கோவையில் பயங்கரம்..!

கோவை குனியமுத்தூர் ,சுப்பு பிள்ளை வீதியில் நேற்று ஒருவர் தலையில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர் குனியமுத்தூர் சுப்பு பிள்ளை வீதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 42) என்பது தெரியவந்தது. இவர் கஞ்சா புகையிலை பொருட்கள் குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் திருமணம் முடிந்து மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரை யாரோ தலையில் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது .போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.