சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை- மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு..!

இராமநாதபுரம் மாவட்ட முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துகள் ஏற்படுவதாலும், இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாலும் கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தெருக்களிலும் சாலைகளிலும் விடுவதை தவிர்க்க வேண்டும்.

இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கால்நடை உரிமையாளர் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும், தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபடும் கால்நடை உரிமையாளர்களது கால்நடைகள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஏலமிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்..