கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனுடன் கோவை நர்சிங் மாணவி ஓட்டம்.!!

கோவை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் மதுமிதா ( வயது 19) கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தாராம் .இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வார்கள். இவரது காதலுக்கு மதுமிதா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற மதுமிதா மீண்டும் விடுதிக்கு திரும்ப வில்லை. எங்கோ மாயமாகி விட்டார் .இது குறித்து அவரது தாயார் ராதிகா காட்டூர்போலீசில் புகார் செய்தார் ..இந்த நிலையில் மாணவி தங்கி இருந்த அறையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார் . அதில் தன்னை தேட வேண்டாம். தான் காதலன் விக்கியுடன் சென்றிருப்பதாக கூறியுள்ளார் .இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..