வேகத்தடையில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி – ஒருவர் படுகாயம்..

கோவை : பொள்ளாச்சி வடுகபாளையம், கோல்டன் சிட்டியை சேர்ந்தவர் நடராஜன் .அவரது மகன் கவுதம் (வயது 21 நேற்று இவரும் கோவை கவுண்டம்பாளையம் ,நியூ ஸ்கீம் காலனி சேர்ந்த விஷ்ணு (வயது 21) என்பவரும் பைக்கில் கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை விஷ்ணு ஓட்டினார். கவுதம் பின்னால் இருந்தார். அங்குள்ள ஒரு கார் ஷோரூம் அருகே பைக் சென்ற போது திடீரென்று வேகதடையில் பைக் மோதி இருவரும் கீழே விழுந்தனர். இருவரும் படுகாயம் அடைந்தனர்.சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவக்கு எடுத்து  செல்லப்பட்டனர். வழியில் கவுதம் இறந்தார். விஷ்ணு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.