குடோனில் பதுக்கிய 54 கிலோ குட்கா பறிமுதல்- கோவை வியாபாரி கைது..!

கோவை ஆர் எஸ். புரம் ,லைட் ஹவுஸ் ரோட்டை சேர்ந்தவர் ஷேக்ஜியா துல் இஸ்லாம் ( வயது 43) இவர் தியாகி குமரன் வீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.ஆர் எஸ் புரம், பூ மார்க்கெட் மாகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள இவரது குடோனில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 54 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் .இது தொடர்பாக ஷேக் ஜியாதுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.