தங்க காசு வாங்கியதை கணவர் கண்டித்ததால் சாணி பவுடர் குடித்து மனைவி தற்கொலை..

கோவை ராமநாதபுரம், மருதூர், சுப்பிரமணியம் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஸ்டவ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (வயது 36) இவர் தனது கணவரிடம் சொல்லாமல் தங்க காசு வாங்கினார்.இதை அவரது கணவர் வேல்முருகன் கண்டித்தார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த தேன்மொழி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து கணவர் வேல்முருகன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.