ஒரே ஸ்கூட்டியில் 4 பேர் பயணம்: மெக்கானிக் பலி – 3 பேர் படுகாயம்..!

கோவை மாவட்டம் வால்பாறை, இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் அவரது மகன் மகேஷ் ( வயது 21) மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் நந்தகுமார், அஸ்வின் ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த, அப்பு என்ற மணிகண்டனின் ஸ்கூட்டியில் பின்னால் இருந்து சென்று கொண்டிருந்தனர். வால்பாறை – சின்கோனா ரோடு .மேட்டுப்பட்டி அருகே சென்ற போது திடீரென்று நிலைதடுமாறி 4 பேரும் ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தனர். இதில் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் மகேஷ் இறந்தார். அப்பு எனற மணிகண்டன், நந்தகுமார், அஸ்வின் , ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது தொடர்பாக ஸ்கூட்டி ஓட்டி வந்த வால்பாறை ,சின் கோனா முதல் டிவிஷனை சேர்ந்த அப்பு என்ற மணிகண்டன் மீது வால்பாறை இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.