தடுப்பு வேலியில் அரசு பஸ் மோதி பயணி ஒருவர் பரிதாப பலி..

கோவை சுக்கிரவார் பேட்டையை சேர்ந்தவர் ராஜகோபால் ( வயது 75) இவர் நேற்று திருச்சியில் இருந்து கோவைக்கு வந்த அரசு பஸ்சில் பயணம் செய்தார்.இந்த பஸ் சூலூர் காங்கேயம் பாளையம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென்று நிலைத்தடுமாறி  ரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியில் மோதியது. இதனால் டிரைவர் திடீர் பிரேக் போட்டார் . அப்போது பஸ்சில் பயணம் செய்த ராஜகோபால் படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து ராஜகோபால் மனைவி ராஜேஸ்வரி சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கரூர் வெங்கமேடு, அம்மன் நகரைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சக்திவேல்( வயது 48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.