கோவையில் 2 இளம் பெண்கள் எங்கோ மாயம்..!

கோவை ராமநாதபுரம் அங்கண்ணன் தேவர் வீதியை சேர்ந்தவர் வடிவேல், இவரது மனைவி சுகன்யா (வயது 28 ) இவர் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் இடத்தை 10–ந் தேதி வீட்டில் இருந்து எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர் வடிவேல் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். இதேபோல கோவை பீளமேடு, கருப்பண்ண கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர். மைக்கேல் ராஜ் .இவரது மகள் ஜீனியா (வயது 19) பிளஸ் 2 படித்துள்ளார். இவர்நேற்று காலையில் தனது தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .இது குறித்து தாயார் லதா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.