மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயற்சி- கணவர் கைது..!

கோவை புலியகுளம் அம்மன் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் பென்னி என்ற பெனடிக்ட்வர்க்கிஸ் (வயது 34). இவரது 2-வது மனைவி திவ்யா ( வயது 27)இவர்களுக்குள் நேற்று தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த பென்னி தனது மனைவி திவ்யாவை இரும்பு கம்பியால் தலை கால் போன்ற இடங்களில் சரமாரி தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திவ்யா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் கணவர் பென்னி என்ற பெனடிக்ட் வர்க்கீசை கைது செய்தனர் .இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொலை முயற்சி உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..