கோவை தனியார் நிறுவன மேனேஜர் வீட்டில் தங்க, வைர நகைகள் திருட்டு-மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 54) இவர் தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். கடத்த 9-ந் தேதி வீடடை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார் .நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5பவுன் தங்க நகைகள் ஒரு வைர மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்து ராஜகோபால் பீளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..