ஒரே நாளில் சாலை விபத்தில் 2 பேர்பரிதாப பலி..

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அன்பு நகர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் அழகிரிசாமி ( வயது 84 )நேற்று இவர் கோவை – -பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றார் . அப்போ அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கார் ஓட்டி வந்த மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

இதேபோல பொள்ளாச்சி ஜமீன் காளியாபுரம் ஆதியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமசாமி (வயது 60) நேற்று இவர் மொபட்டில் பொள்ளாச்சி – நடுப்புணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். புரவிபாளையம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் இவரது மொபட் மீது மோதியது. இதில் சேதுராமசாமி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து வடக்கி பாளையம் போலீஸ் புகார் செய்யப்பட்டது. போலீசார் மற்றொரு பைக் ஒட்டி வந்த கிணத்துக்கடவு பாலார்பதியைச் சேர்ந்த சுபரேஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.