கத்தியை காட்டி மிரட்டி கோவை கல்லூரி மாணவரிடம் செயின் பறிப்பு.!!

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள வையம்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சக்திவேல் (வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரி அருகே உள்ள ஒரு டீக்கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்செயின் அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை கொளளையடித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர் .இது குறித்து சக்திவேல் பீளமேடுபோலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர்மாடசாமி வழக்கு பதிவு செய்து பிரஜேஷ் பிரசாந்த், சூர்யா ஆகியோரை தேடி வருகிறார்.