மசாஜ் சென்டரில் விபச்சாரம் :2 பெண் புரோக்கர்கள் கைது – அழகிகள் மீட்பு.!!

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு நேற்று இரவு சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த விபச்சார புரோக்கரான கேரளாவை சேர்ந்த சபீனா ( வயது 33) ராமநாதபுரத்தைச் சேர்ந்த குழந்தை தெரசா (வயது 39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 2 மசாஜ் அழகிகள் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.