2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் – மகளுடன் சென்ற தந்தை பரிதாப பலி..

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பு,சக்தி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 48) இவர் நேற்று தனது மகன் ஹேமலதா ( வயது 18 ) என்பருடன் பைக்கில் மேட்டுப்பாளையம் -சக்தி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். ஆலங்கொம்பு பஞ்சாயத்து அலுவலகம் முன் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் பைக் ஒட்டி வந்த பழனிச்சாமி அவரது மகள் ஹேமலதா மற்றொரு பைக்கில் பின்னால் இருந்து வந்த முகமத் அனாய்ஸ் (வயது 18) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் பழனிச்சாமி இறந்தார் படுகாயம் அடைந்த ஹேமலதா,முகமதுஅனஸ் ஆகியோர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து பழனிச்சாமியின் மனைவி மேனகா சிறுமுகை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சித்ரா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பைக் ஓட்டி வந்த சையத் பர்கன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..