இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து 37 பவுன் நகை, ரூ.12 லட்சம் கொள்ளை – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை பீளமேடு புதூர் ,திருமகள் நகர், 3-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 58 )இவர் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் பெங்களூரு சென்று விட்டார்.நேற்று திரும்பி வந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்த பின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 37 பவுன் தங்க நகைகளையும், ரூ.12 லட்சம் பணத்தையும் காணவில்லை.யாரோ மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.அங்கிருந்த சிசிடிவி கேமரா டிவிஆர் ஆகியவையும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் தமிழரசு, சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..