மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி முகாம் இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது…

இருகூர் : மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி முகாம் 22.12.2023 இன்று நமது இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில்
கோவை மாவட்ட துணை ஆட்சியர் திருமதி. பி.மணிமேகலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களும், கோயம்புத்தூர் டவுன் பஞ்சாயத்துகள் உதவி இயக்குநர் திரு.துவாரகநாத் சிங் அவர்களும், இருகூர் பேரூராட்சி தலைவர் திரு.சந்திரன் அவர்களும் இருகூர் பேரூராட்சி நிர்வாக அதிகாரி திருமதி.கலையரசி அவர்களும் சிங்காநல்லூர் காவல் துணை ஆய்வாளர். திரு.கார்த்திக் பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்து பெற்றுக்கொண்டு துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். இருகூர் பேரூராட்சிக்குட்பட்ட 18வார்டு அனைத்து கவுன்சிலர்களும் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அனைவரும் மக்களை வரிசைப்படுத்தி ஒவ்வொருவரது கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து பெற்றுக்கொள்ள ஒத்துழைப்பு அளித்தார்கள். சிங்கநல்லூர் காவல் துறை சார்பில் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.