தண்ணீர் டாங்கில் மூழ்கி இளம் பெண் உயிரிழப்பு..

கோவை ரத்தினபுரி, தயிர் இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி இவரது மனைவி தேவி ( வயது 27) கூலித் தொழிலாளி .இவர் நேற்று சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள ஜி.வி.டவரில் தண்ணீர் டாங்கில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார் .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது .அவர்கள் தண்ணீர் தொட்டிக்குள் மிதந்த தேவியின் பிணத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக சிங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்