நடுரோட்டில் தொழிலாளிக்கு பீர் பாட்டில் குத்து..!

கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோடு, குறும்பர் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 38) இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்ற வெட்டு அருண் என்பவருக்கு பணம் கொடுத்திருந்தாராம். நேற்று பீளமேடு நவ இந்தியா சிக்னல் அருகே கார்த்திகேயன் நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த அருண் என்ற வெட்டு அருணிடம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டாராம். இதில் ஆத்திரமடைந்த அருண் பீர் பாட்டிலால் கார்த்திகேயன் தலையில் குத்தினார்.இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அருண் என்ற வெட்டு அருணை தேடி வருகிறார்கள்.