கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு…

கோயமுத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் கோயமுத்தூர் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு உடனடி தேவையான குடிநீர் பாட்டில்கள்,அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், வெங்காயம், பிரட், பிஸ்கட்,உள்ளிட்ட உணவுப் பொருட்கள் , பாய், பெட்ஷீட், நாப்கின் கோயமுத்தூர் புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் சேகரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட பொருட்கள் சூலூர் காவல் நிலையத்தில் இருந்து காவல்துறை வாகனம் மூலம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.