மின்சாரம் தாக்கி அதிமுக வார்டு செயலாளர் உயிரிழப்பு..!

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம், மணிகண்டன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 50) இவர் அ.தி.மு.க. 87-வது வார்டு செயலாளராக பதவி வகித்து வந்தார் . நேற்று இவரது வீட்டில் மோட்டார் போடுவதற்காக சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மனைவி ஜாக்குலின் இமான்குலேட் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார்கள்.