திருச்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருச்சி இபி ரோடு அருகில் உள்ள 17. 18. 19 ஆம் வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் திருச்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி மண்டல தலைவர் ஜெய நிர்மலா மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஜே இ புஷ்பராணி அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களை பெற்றனர் இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பகுதி குறைகளையும் தங்களது சொந்த குறைகளையும் அதிகாரிகளிடம் எடுத்து சொல்லி மனுவாக கொடுத்து விட்டு சென்றனர். இந்தத் திட்டமானது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.