டி,வி ,செட்டாப் பாக்ஸ்சில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு..

டி,வி ,செட்டாப் பாக்ஸ்சில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு.. கோவை மாவட்டம் காரமடை , சாஸ்திரி நகரை சேர்ந்தவர் திம்மன் இவரது மகன் முனியப்பன் ( வயது 39) கூலி தொழிலாளி..நேற்று இவர் ஈரக்கையுடன் அவரது வீட்டில் உள்ள டிவி செட்டாப் பாக்ஸ்சைதொட்டாராம் அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல்நேற்று மாலை இறந்தார். இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் விஜயராஜு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.