ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ 2 ஆயிரம் திருடிய 2 கேரள பெண்கள் கைது..!

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ 2 ஆயிரம் திருடிய 2 கேரள பெண்கள் கைது..! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை ரோட்டில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் , நேற்று இவர் தனது மனைவியுடன் மேட்டுப்பாளையத்துக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் கூட்டம்.அதிகமாக இருந்தது .நின்று கொண்டு பயணம் செய்தனர். அப்போது ரங்க நாதனின் மனைவியிடம் இருந்த மனிபர்சை ஒரு பெண் நைசாக திருடி மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார்.அந்த பர்சில் ரூ. 2ஆயிரம் பணம் இருந்தது .இதை பார்த்த ரங்கநாதன் மனைவி அதில் ஒரு பெண்ணை கையும் களவுமாக பிடித்தார். பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மற்றொரு பெண்ணை மடக்கிப் பிடித்தனர். இவர்கள் இருவரும் மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அந்த பெண்கள் பாலக்காடு சுண்ணாம்பு தாரையை சேர்ந்த சுனில் மனைவி (வயது 22) மணிகண்டன் மனைவி (வயது 25!)என்பது தெரியவந்தது.. பணம் பறிமுதல் செய்யப்பட்டது.