கோவையில் மின்சாரம் தாக்கி பெண் பலி..

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம், சாரங்கா நகரை சேர்ந்தவர் மாரியப்பன். டெய்லர். இவரது மனைவி ரோகினி ( வயது 33) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2மகன்கள் உள்ளனர். இவர் நேற்று அவரது டெய்லர் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் ‘அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரகாஷ் என்பவரது வீட்டில் தண்ணீர் டேங்கில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிந்தது.தண்ணீரை நிறுத்தச் சென்ற போது மோட்டார் வயரில் உள்ள மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வரும்  வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து இவரது கணவர் மாரியப்பன் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.