பால் கறக்க சென்ற போது பாம்பு கடித்து விவசாயி பலி..!

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள தேரம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 70 ) விவசாயி .இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகைக்கு பால் கறக்க சென்றார் .அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்..பின்னர் மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்துவிட்டார் .இதுகுறித்து அவரது மனைவி சாவித்திரி காரமடை போலீசில் புகார் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.