அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு பெண் பரிதாப பலி..

கோவை : கோவில் பீளமேடு ஏ.டி. காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சூரியகலா ( வயது 55) இவர் இரத்த அழுத்தம் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தாராம். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மகன் ரகுநாத் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.