கணவருடன் வாக்கிங் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் அபேஸ்..

கோவை உப்பிலிபாளையம் ஏ. ஆர் .கே .ரோடு, கோ – ஆப்ரேட்டிங் காலனியை சேர்ந்தவர் ஜீவராம். இவரது மனைவி சிந்தியா ( வயது 50) கணவன் – மனைவி இருவரும் நேற்று காரில் ரேஸ்கோர்ஸ் சென்றனர். அங்கு காரை நிறுத்திவிட்டு நடை பயிற்சி செய்தனர். பின்னர் காரில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டனர். வீட்டில் வந்து பார்த்ததும் இவர் கழுத்தில் அந்த 6 பவுன் தங்கச் செயினை காணவில்லை.. எப்படி திருட்டு போனது என்பது தெரியவில்லை . இது குறித்து சிந்தியா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.