பொள்ளாச்சியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..

கோவை:
பொள்ளாச்சி மரபேட்டை வீதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 58). இவருக்கு
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது வலது கால்
செயல் இழந்தது. இதனை நினைத்து அவர் மனவேதனை அடைந்து வந்தார்.
சம்பவத்தன்று விரக்தி அைடந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து
மரபேட்டை மாரியம்மான் கோவில் முன்பு உள்ள கிணற்றில் குதித்தார். இதனை
கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு
ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை
செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.