வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய கேரள வாலிபர் கைது..!

கோவை:
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுப்பேகண்டன் புதூரை சேர்ந்தவர் பிரசாந்த்
கணேஷ் (வயது 44). லாரி டிரைவர். சம்பவத்தன்று அவர் தனது மோட்டார்
சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார். மறுநாள் காலை
எழுந்து வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு
போயிருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி
பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து பிரசாந்த் கணேஷ்
ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த
டிவைர் சதாம் உசேன் (28) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது
தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சதாம் உசேனை கைது செய்து கோர்ட்டில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.