ஹவுராவில் இருந்து சென்னை வந்த ரயிலில் 13 கிலோ கஞ்சா பிடிபட்டது

சென்னை சென்ட்ரலில் 4 வது பிளாட்பார்மில் ஹௌராவிலிருந்து வந்த சூப்பர் பாஸ் ட் ரயில் வந்து நின்றது அதில் வந்த பயணிகள் வேக வேகமாக சென்றனர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கும்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே அவரை சோதனையிட்டனர் அவர் வைத்திருந்த பையில் 13 கிலோ கஞ்சா இருந்தை கண்டுபிடித்தனர் அவனை முதல் மாடியில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் விசாரணையில் அவனது பெயர் ராஜு வயது 28 தகப்பனார் பெயர் ராசையா மாமூடு ஜங்ஷன் வாத்தியார் விளை கிருஷ்ணன்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் என தெரிய வந்தது ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் முதல் நிலை காவலர் பிரகாசம் காவலர் வெங்கடேசன் ஆகியோர் குற்றவாளி யை பரங்கிமலை மதுவிலக்கு அமலாக பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர்