விநாயகர் கோவிலில் துணிகரதிருட்டு.

கோவை சிங்கநல்லூர் நீலீகோணம்பாளையம், ஆர் .கே.கே.புதூர் பகுதியில் அருள்மிகு. சித்தி விநாயகர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் யாரோ மர்ம ஆசாமிகள் கதவின் பூட்டை உடைக்காமல், கதவை நெம்பி திறந்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்த 9 வெண்கல பானை, 6 வெண்கல தட்டு ,5 வெண்கல செம்பு 3 வெண்கல விளக்குகள் மற்றும் சில்வர் பாத்திரங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது..இதுகுறித்து கோவில் பொருளாளர் மோகன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள். அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.