காட்டு யானை தாக்கி பெண் பரிதாப சாவு ..

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள வெள்ளியங்காடு, மூணு குட்டையை சேர்ந்தவர் சக்திவேல்.இவரது மனைவி கருப்பாத்தாள் ( வயது 60) கூலி வேலை செய்து வந்தார்.இவர் நேற்று இவர் மாட்டுக்குபுல் அறுப்பதற்கு அங்குள்ள மூணு குட்டை, யானை சேத்து பள்ளம் பகுதிக்கு சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த காட்டு யானை இவரை துரத்தி சென்று கீழே தள்ளி வயிற்றில் மிதித்தது .இதில் கருப்பாத்தாள் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது மகன் பொன்னுசாமி காரமடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது. யானை தாக்கி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..