அரசு அலுலக புதிய கட்டிடத்தில் வேலை செய்யும் போது தவறி விழுந்து தொழிலாளி பலி..!

கோவை : நாகை மாவட்டம் ,சீர்காழியை சேர்ந்தவர் கணபதி .இவரது மகன் இளையராஜா (வயது 24) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று பொள்ளாச்சி தெற்கு யூனியன் அலுவலக புதிய கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கீழே விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அவர் சிகிச்சை மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார்.இதுகுறித்து மனைவி சரண்யா பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்துள்ளார், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இளையராஜாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது 2பெண் குழந்தைகள் உள்ளனர்.