ஏணியில் இருந்து தவறி விழுந்து வெல்டிங் காண்ட்ராக்டர் பரிதாப பலி..

கோவை : திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள ஆர் .கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 57) வெல்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார் .இவர் நேற்று கோமங்கலம் புதூரில் கனகராஜ் என்பவருக்கு வீட்டில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராத விதமாக 10 மீட்டர் உயரம் கொண்ட இரும்பு ஏணியிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மகன் ஹரி பிரசாந்த் கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தநாயகி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.