கோவை இன்ஜினியர் வீட்டில் திருட முயன்ற வாலிபரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!

கோவை சாய்பாபா காலனி, வெங்கடாபுரம் கங்கா நாயுடு வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 58 )இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஜூனியர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று ஜி.என்.மில் பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் உள்ள இவரது வீட்டில் ஒரு ஆசாமி நுழைந்து திருட முயன்றார். அங்கிருந்தவர்கள் இதை பார்த்து அவரை கையும் களவுமாக பிடித்து துடியலூர் போலீசில் ஒப் படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கோவை டவுன்ஹால் வி .கே. செட்டியார் வீதியைச் சேர்ந்த நெல்சன் ( வயது 27 )என்பது தெரியவந்தது. இவர் உக்கடம் மீன் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.