கோவிலுக்குச் செல்வதாக சென்ற முதியவர் ஆற்றில் சடலமாக மீட்பு..

கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள கோவிந்த நாயக்கன்பாளையம், நேதாஜி நகரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 70) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் தோட்ட வேலை செய்து வந்தார். கடந்த 4 -ந்தேதி மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை .இந்த நிலையில் நேற்று அவர் சிறுமுகை ஆலாங்கொம்பு, பழையூர் பகுதியில் பவானி ஆற்றில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சிறுவகை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் விசாரணை நடந்து வருகிறது..