கோவை வழியாக யஸ்வந்த்பூா் – கண்ணூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்..!

கோவை வழித்தடத்தில் கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூா் – கண்ணூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
யஸ்வந்த்பூரில் இருந்து அக்டோபா் 12-ந் தேதி முதல் நவம்பா் 2-ந் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 7.40 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06283) அன்று இரவு 8.30 மணிக்கு கண்ணூரை சென்றடையும். இதேபோன்று, அக்டோபா் 12-ந் தேதி முதல் நவம்பா் 2-ந் தேதி வரை புதன்கிழமைகளில் இரவு 11 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06283) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு யஸ்வந்த்பூரை சென்றடையும்.
இந்த ரயில் தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், சொரனூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருப்பத்தூா், கிருஷ்ணராஜபுரம், பானஸ்வாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.