மொபட் மீது வேன் மோதி தொழிலாளி பரிதாப பலி..

கோவை மாவட்டம் சிறுமுகைப் பக்கம் உள்ள சின்ன கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் ( வயது 52) கூலிதொழிலாளி. இவர் நேற்று மேட்டுப்பாளையம்- சக்தி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.சிறுமுகை மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு வேன் இவரது மொபட் மீது மோதியது .இதில் சண்முகம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். இது குறித்து அவரது மனைவி சந்திரா (வயது 40) சிறுமுகை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் டிரைவர் மோகன் ( வயது 47) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.