கோவை அப்பார்ட்மெண்டில் தங்கியிருக்கும் ஆன்லைன் வர்த்தக வியாபாரியிடம் நகை திருடிய 2 பேர் கைது..!

கோவை சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் நண்பர்களுடன் தங்கியிருப்பவர் லலித் ராகவ் (வயது 29) இவர் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார்.இவரது வீட்டிலிருந்த 3 பவுன் நகையை யாரோ திருடி விட்டனர் . இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம் ஆர். எஸ் .நகரை சேர்ந்த முத்துச்செல்வன் ( வயது 35) கே. கே. புதூர் .அண்ணா நகரை சேர்ந்த ஷாஜகான் (வயது 43) இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து நகை மீட்கப்பட்டது.