வைகை சிலம்பம் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை..!

மதுரை பாத்திமா கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் தென்னவர்  சிலம்பம் பள்ளி சார்பாக மாபெரும் சிலம்பம் போட்டி நடைபெற்றது.  இதில் வைகை சிலம்பம் பள்ளி தலைவர் சுகன்யா, செயலாளர் பாலு, அமைப்பாளர் விமல் குமார் ஆகியோர் தலைமையில் 70 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ், ஐகோர்ட் நீதிபதி முரளிசங்கர் மற்றும் டி.எஸ்.பி லில்லி கிரேஸ், ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி கௌரவித்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது..