கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் சுதந்திர தின கொடிக்கம்பத்தில் சிக்கிய பலூன்கள் – பரபரப்பு வீடியோ..!

கோவை வஉசி பூங்கா மைதானத்தில் நேற்று நடந்த சுதந்திர தின கொடியேற்று விழாவில் கலெக்டர் கிராந்தி குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மூவர்ண பலூன்களை பறக்க விட்டனர் . இதில் சில பலூன்கள் காற்றில் உயரமாக பறந்து .சில பலூன்கள் அங்கு ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடி கம்பத்தில் சிக்கிக் கொண்டது . இதனால் தேசியக்கொடி மறைக்கப்பட்டு பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் தீயணைப்பு வீரர்கள் ஏணி வைத்து ஏறி கம்பத்தில் சிக்கிய பலன்களை எடுத்து பறக்க விட்டனர் . இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..